வேட்பாளரின் ‘அடைமொழி’ யை நினைவு கூறும் வகையில், வார்டு மக்களுக்கு நூதன முறையில் ‘ஆப்பிள்’ கொடுத்து, வாக்கு சேகரித்து வரும் 19வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளரால், எதிர்த்து போட்டியிடுபவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி முன்னிட்டு, நேற்றுடன் (பிப்.,4) வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து வார்டு பகுதியில் ‘வட்டமிடும்’ வேட்பாளர்களால் தேர்தல் ‘சூடு’ பிடிக்க துவங்கிவிட்டது. முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் மற்றும் வார்டு மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கும் ஒரு படி மேலாக ‘அடைமொழி’ கொண்ட வேட்பாளர்கள் தங்களை நினைவு கூறும் விதத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது தான், சற்று வித்யாசமாக உள்ளது. 19வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பி.சண்முகசுந்தரம் என்ற ‘ஆப்பிள்’ முருகன்.
இவர் வார்டு மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர். காரணம் 2001 முதல் 2011 வரை வார்டு கவுன்சிலராக இருந்தவர். அது மட்டுமின்றி, கட்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இதனால் வார்டு மக்களிடம் ‘சகஜமாக’ பழகக்கூடிய இவர் சமதர்மபுரம், எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் தனது வார்டு மக்களை மரியாதை நிமித்தமாக நேரடியாக சந்தித்து, தன்னை நினைவு கூறும் வகையில் ‘ஆப்பிள்’ கொடுத்து அவர்களுக்கு வெண்ணிற பொன்னாடை அணிவித்து வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதை கவனித்த மற்ற வேட்பாளர்கள் நமக்கு ஒரு ‘அடைமொழி’ இல்லாமல் போனதே என வருத்தப்பட்டதையும் காணமுடிந்தது. எது எப்படியே, இந்த வார்டை பொறுத்தவரை ஆப்பிள் ‘இனிக்கும்’ என்றே நாமும்….நம்புவோம்.
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]