• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றம்…

Byகாயத்ரி

Jul 29, 2022

இன்று பிரதமர் மோடி காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் (ஐஎஃப்எஸ்சி) ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய பின், நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றமான இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சை (ஐஐபிஎக்ஸ்) தொடங்கி வைக்கிறார்.

இந்த பரிவர்த்தனையானது திறமையான விலையைக் கண்டறியவும், பொறுப்பான ஆதாரம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவும், தவிர, இந்தியாவில் தங்கத்தை நிதியாக்குவதற்கு உதவுகிறது என்று IFSC ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.