• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் பொதுமக்கள் அவதி..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் நகரில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

திண்டுக்கல் நகரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான காமராஜர் அணையின் நீர்மட்டம் குறைகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நகரில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அடலூர், பன்ரிமலை, பண்ணைக்காடு, புல்லவெளி, தடியங்குடிசை, மங்களம் கொம்பு, சோலைக்காடு மற்றும் பிற பகுதிகளில் பெய்யும் மழையிலிருந்து இந்த அணைக்கு நீர் கிடைக்கிறது. மழைநீர் ஓடைகள் வழியாக அணைக்குள் பாயும் வகையில் நீர்வழிகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் மழை அளவு இல்லாததால் பெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நகரில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. மக்கள் குடிப்பது மட்டும் குடிப்பதற்கு பிற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதைப்போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.