விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மேம்பாட்டுபணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ் ஆய்வு செய்தார்.
சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் .டாக்டர்.ஆர்.செல்வராஜ் சேத்தூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, பேருந்து நிலைய பொதுக்கழிப்பறை மற்றும் மாரியம்மன் கோவில் தெப்பம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைககள் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சு.சேதுராமன் , உதவி செயற்பொறியாளர் .ப.சுரேஷ்குமார், சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் க.வெங்கடகோபு, செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் .பா.சந்திரகலா, உதவி பொறியாளர் .பாண்டியராஜ், சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் .இ.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் .மா.காளீஸ்வரி, மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.