• Thu. Apr 25th, 2024

“3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்”வடக்கு மண்டல ஐ.ஜி. பேட்டி!

ByA.Tamilselvan

Feb 13, 2023

திருவண்ணாமலை ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது; 9 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றன. குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது; தமிழ்நாட்டில் இது முதல்முறை ஏ.டி.எம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும் எனவும் இன்னும் 3 நாடகளில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் எனவும் வடக்குமண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *