ஈரோடு, எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குட்டி காவலர் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் கே. சுமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு படை தேசிய பயிற்சியாளரும், குட்டி காவலர் திட்டத்தின் மாநில பயிற்சியாளருமான ஆர். என். பி. ராமநாதன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து திட்டம் பற்றிய நோக்கத்தையும், செயல்பாடுகளையும் மாணவர்களிடம் விளக்கினார்.இளம் பள்ளி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து கற்பித்து, அவர்களை சாலை பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும்.சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
அதன்படி “நான் இன்று முதல் குட்டி காவலராக பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளை கவனமாக கடைப்பிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன். ஓடும் பஸ்ஸில் ஏறவும் இறங்கவும் கூடாது என்பதை அறிவேன்.



இரு சக்கர வாகன பயணத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்,நான்கு சக்கர வாகன பயணத்தில் இருக்கை பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன். இந்த சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முழுமையாக புரிந்து கொண்டு அதை உளமாற பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று கூறி மாணவ மாணவிகள்உறுதிமொழி எடுத்தனர்.
இன்று முதல் கட்டமாக 10 மாணவர்களுக்கு குட்டி காவலர் திட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]