கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சித்தராமையா. இவர் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தியும் இவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சித்தராமையா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி என்னை காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நான் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டேன். தேசிய அரசியலில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. கர்நாடாக மாநில அரசியலில் மட்டுமே இருக்கிறேன்’’ என்றார்.