வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்துல நிறைவேறுது. நாம ஜெயிச்சுட்டோம் மாறானு அன்புமணி ராமதாஸ் ஆர்ம்ஸ்லாம் மொரட்டு தனமா தெரியுற மாதிரி குலுங்கி குலுங்கி ஆனந்த கண்ணீருல மிதந்துட்டு
இந்த ஒரு விஷயத்தை வச்சே 2021 சட்டமன்ற தேர்தல்ல இனி நம்ம ஆட்சி தான் , இது மாம்பழம் சீசன் அதுனால மாம்பழத்துக்கு ஓட்டு போடுங்கனு தொண்ட தண்ணி வத்த கத்தி ஓட்டு கேட்டாரு…ஆனா தேர்தல் முடிவுல வடதமிழகம் அப்படியே திமுக பக்கம் போயிடுச்சு.. உங்களுக்கு தான எல்லாமே செஞ்சோம் நீங்க இப்டி பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலனு சோக மாகிட்டாரு… ஆமாங்க இதுக்கு நடுவுல தான் அந்த சம்பவம் நடந்துச்சு
இது நிரந்தரமான சட்டம் இல்ல.. தற்காலிகம் தான்னு எடப்பாடி பழனிச்சாமி இன்னும் பலரும் அவங்களே சொல்லிருந்துருகாங்க… இதெல்லாம் கேட்டு பதறனுன ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூட்டணி தர்மத்தை மீறிட்டீங்க , இது உங்களுக்கே நியாயமா அடுக்குமானு கதறிட்டு இருக்கும் போது சென்னை உயர்நீதிமன்றத்துல இனித்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வழக்கு குவிந்தது.
ஏம்ப்பா இத நீங்களே என்னனு பாருங்கனு மதுரை பெஞ்ச்க்கு மாத்துனாங்க.. அங்க இந்த வழக்க விசாரிச்சவங்க மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டத்துல அனுமதி இருக்கா..சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாம எப்படி இட ஒதுக்கீடு வழங்குனீங்கனு கேள்வி மேல கேள்வி கேட்டு இது செல்லாதுனு அந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்ட ரத்து செய்து உத்தரவு போட்டாங்க.. அதன் பிறகு புதுசா பொறுப்பேற்ற திமுக அரசும் நாங்க இவங்களுக்காக போராடி உரிமைய வாங்கி கொடுப்போம்னு உச்ச நீதிமன்றம் போனாங்க அங்கயும் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு சரி தான்னு சொல்லி அனுப்பிட்டாங்க…
இனி எப்படி நம்ம மக்கள் முகத்துல முழிக்கிறது…2026 தேர்தல் முதல்வராக அன்புமணி ராமதாஸை உருவாக்கணும்னு சபதம் எடுத்தது… டிரைன் மறிச்சு போராடினது..எல்லாம் வெறும் நடிப்பு தானா கோபால் என அன்புமணி ராமதாஸ் தன்னையே சுய பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். அடுத்த என்ன பண்ண போறோம்னு அவரே சொல்லுவாரு வெயிட் பண்ணி பார்க்கலாம்
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: