• Fri. Mar 29th, 2024

ஆக.-1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

ByA.Tamilselvan

Jul 28, 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இதையொட்டி, அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. ஆடிப்பூர தேர் திருவிழா வருகிற 1-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *