• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் கருவி

Byமதி

Dec 12, 2021

உலகமே ஒமைக்ரான் அச்சத்தில் உள்ள நிலையில், ஐசிஎம்ஆர் குழு ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது.

இதைப் ஐசிஎம்ஆர் அறிவியல் வல்லுநர் டாக்டர் பிஸ்வஜோதி போர்காகோட்டி, ஐசிஎம்ஆர் மற்றும் ஆர்எம்ஆர்சி இணைந்து, ஆர்சிபிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியைக் கண்டறிந்து உள்ளதாகவும்., இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை 2 மணிநேரத்தில் தெரிந்துவிடும்.

கோல்கட்டாவை சேர்ந்த மருந்து நிறுவனமான ஜிசிசி பயோடெக், இந்த கருவியை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் தயாரித்து வருகிறது. ஒரு உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் இருக்கிறதா? என்பது இந்தக் கருவியில் தெரியவரும். இதன் முடிவுகள் 100 சதவீதம் சரியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.