தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எனது பிறந்தநாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள மடலில், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம்; இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்போம் என்பதே தனது பிறந்தநாள் செய்தி என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மாநில உரிமையை தேசிய அளவில் நிலைநாட்டும் ஜனநாயக அறப்பணிக்கு தொண்டர்கள் அளிக்கும் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாக கருதுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.