மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு எடை போடுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறிய பின்பு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வரை மூடை ஒன்றுக்கு ரூபாய் 50 விவசாயிகளிடம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்
மேலும் இந்த குலமங்கலம் பகுதியானது வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கு வருவதால் அமைச்சரின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறதா…?? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சுமார் 2000 ஏக்கரில் விளைந்த நெல்மணிகள் அறுவடை செய்து வைக்கப்பட்ட நிலையில் அவற்றை முறையாக எடையிடுவதும் இல்லை. எடையிடப்பட்ட நெல் மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி செல்வதும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க வந்த அதிகாரியும் விவசாயிகளிடம் சமரசம் பேசி தவறு ஏதும் நடக்கவில்லை என்று ஒப்புதலாக கையெழுத்து வாங்கி சென்றது விவசாயிகளை மேலும் எரிச்சலூட்டியது. எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் வந்து ஆய்வு செய்து முறைகேடு ஏற்படாத வண்ணம் விவசாயிகளுக்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்.இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் கூட்டணி கட்சியினரே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]