• Thu. Mar 28th, 2024

பொள்ளாச்சி அருகே தாய், மகள் தற்கொலை:போலீசார் விசாரணை

பொள்ளாச்சியில் மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரிக்க முடியாத மனவேதனையில் விஷம் அருந்தி தாய் மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


டி.நல்லி கவுண்டன் பாளையம் தாளக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் தோட்டத்தில் கணவனை இழந்த கலாமணி தனது மகள் பிரியாவுடன் கூலி வேலை செய்து வருகிறார். தனது மகள் பிரியா பிறந்தது முதல் மனவளர்ச்சி குன்றிய கலாமணி பராமரிப்பில் இருந்துள்ளார். தோட்டத்தில் பணிபுரியும் நபர்களிடம் தனக்குப் பிறகு தனது மகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை என விரக்தியில் மனம் வேதனையில் பேசியுள்ளார். கடந்த 21ம் தேதி விஷம் குடித்து தாய் மகள் தற்கொலை செய்துள்ளனர்.


இருவரையும் காணவில்லை என தேடிய இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர் . இது குறித்து தோட்டத்து உரிமையாளர் புகார் அளித்ததன் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *