சத்யராஜ் நடித்திருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தினை வெளியிடுவதற்கு கேரளா மாநிலத்தில் உள்ள ஆழப்புழா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹனி பீ பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.பிரசாத் எஸ்.என். இசையமைக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநரான தீரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்ட நிலையில், (2021டிசம்பர் 25)நாளை படம் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்த சூழலில் இந்தப் படத்தை வெளியிட ஆழப்புழா நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்து இந்தப் படத்துடன் சம்பந்தப்பட்ட இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே.கே.சுதாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது “இந்தப் படம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
துவங்கப்பட்டபோது இந்தப் படத்தை தயாரிப்பாளர் சஜீப்பின் ஹனி பீ புரொடெக்சன்ஸ் நிறுவனமும், என்னுடைய இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். இந்தப் படத்தில் நான் இணை தயாரிப்பாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தேன்.
படத்தின் துவக்கத்தில் மிக அதிகமாக என்னுடைய இன்பினிட்டி நிறுவனமே பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரித்து முடித்துள்ளது. இந்த நிலையில் என்னிடம் சொல்லாமலேயே படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரையும், என் நிறுவனத்தின் பெயரையும் நீக்கிவிட்டு தன்னுடைய பெயரையும், தன் நிறுவனத்தின் பெயரையும் மட்டுமே தயாரிப்பாளர் சஜீப் கொடுத்துள்ளார்.
இது குறித்து நாங்கள் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர் மீது கேரள மாநிலம் ஆழப்புழாவில் உள்ள துணை நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், மோசடி செய்ததற்கான கிரிமினல் வழக்கையும் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தத் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்திற்கு சென்சார் சான்றிதழைப் பெற்றுவிட்டு அல் டாரீஸ் என்ற பட நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளர் சஜீப் விற்பனை செய்துவிட்டார்.மேலும் இந்தப் படம் டிசம்பர் 24 அன்று வெளியாவதாக வெளி வந்த செய்தியை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டோம். இதனல், ஆழப்புழா நீதிமன்றம் இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தினை தியேட்டர்கள், ஓடிடியில் மட்டுமின்றி எந்த வகையிலும் வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது..” என்றார்.
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]
- சமையல் குறிப்புகள்சோயா உருண்டைக்குழம்பு: தேவையான பொருட்கள்: தாளிக்க :சீரகம் : 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு […]
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்இலங்கையில் அந்த நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்தவாரம் […]
- கிசான் திட்டம்… அடுத்த மாதம் 12ஆம் தவணை..இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக […]
- பொது அறிவு வினா விடைகள்சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் எது?பெக்மென் சாதனம் கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?கார்பன் […]