சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி பகுதிகளில் நடைபெற்று வந்தது முடிவுக்கு வந்திருக்கிறது
தமிழ் திரைப்பட தயாரிப்பில் வெற்றிதோல்விகளை பற்றி யோசிக்காமல் தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்க’த்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.

மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21-ம் தேதி முடிவடைந்தது.இதைப் பற்றி நடிகர் கார்த்தி சொல்லும்போது, “நீண்ட நாட்களுக்குப் பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷப்பட்டேன். மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும்.என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2D நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் நன்றிகள்..“ என்றார்.
இது குறித்து படத்தின் நாயகியான அதிதி சங்கர் கூறியிருப்பதாவது என்னுடைய ஒரு கனவு நிறைவேறிய உணர்வை இந்தப் படப்பிடிப்பு தந்துள்ளது. விருமன் படக் குழுவினர் அனைவரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். இவர்களை நிஜமாகவே நான் இப்போது மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: S.K.செல்வகுமார் ஸ்டண்ட்:அனல் அரசு கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – வெங்கட் ராஜ், நடன இயக்கம் – ஷோபி, பாபா பாஸ்கர், ராதிகா, ஜானி, இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.
பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும்கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாகவும், ஜாதிய குறியீடுகளுடன் இருக்கும் ஜாதியை முன்னிலைப்படுத்தும் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகியிருக்கிறாரா என்பதை விமர்சகர்களும், பொதுவான ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தனது முதல் படத்திலேயே கனமான கதா பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர். அறிமுக நாயகியான அதிதி ஷங்கர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்துள்ளார் என்று மொத்தப் படப்பிடிப்பு குழுவும் சொல்கிறது.
இந்த ‘விருமன்’ திரைப்படம் 2022-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]