மதுரை தி.மு.க. மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் பி ஏ வரலாறு எம் ஏ.Lib science படித்த பட்டதாரி. குடும்ப பெண்ணாக இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தற்போது மதுரை மேயர் பதவிக்கு திமுக தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 57-வது வார்டில் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தவர் இந்திராணி பொன்வசந்த்.இந்திராணி பொன்வசந்த், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட மாநகராட்சி 57-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த வார்டில் மொத்தம் 12வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் இந்திராணி 6 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்இழந்தனர். 2-ம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் 958 வாக்குகள் பெற்று இருந்தார். இந்திராணி 5 ஆயிரத்து 893 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
கணவர் பொன் வசந்த் குறித்த தகவல்கள்
பொன்.வசந்த், மதுரை மாவட்டம் வாலாந்தூர் ஆரியப்பட்டியை சேர்ந்தவர். வக்கீலாகவும், விவசாயமும் செய்து வருகிறார். தி.மு.க. ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.கடந்த 1993-ம் ஆண்டு கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினராக இருக்கிறார். 2001-ம் ஆண்டு முதல் மாவட்ட மாணரவணி துணை அமைப்பாளராகவும், 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு முதல் ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.இவர் 25-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் தேர்தல்பொறுப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் அனைத்திலும் கலந்து கொண்டு இருக்கிறார். பொன்.வசந்த், தந்தையும் தி.மு.க.வின் தீவிர உறுப்பினர் ஆவார். இவர்களது குடும்பம் தி.மு.க. பாராம்பரியம் கொண்டது.
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]