ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேழ்வரகு இட்லி:
இன்று இருக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. இதனால் எலும்பு தேய்மானம் என்பது மிக விரைவாகவே வந்து விடுகிறது. குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் கால்சியம் குறைபாட்டை நீக்கக்கூடிய அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு.
நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பதை போல, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய்க்கு முதியவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – ஒரு கப், இட்லி அரிசி – அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. –
செய்முறை விளக்கம்:
சுவையான கேழ்வரகு இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் எந்த கப்பில் கேழ்வரகு எடுத்தீர்களோ, அதே கப் அளவிற்கு இட்லி அரிசி அரை கப் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல உளுந்து அரை கப் அளவிற்கு சேர்த்து, வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு நன்கு நாலைந்து முறை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். ஐந்து மணி நேரத்திற்கு பிறகு எல்லா பொருட்களும் நன்கு ஊறி இருக்கும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு அரைக்க பெரிய மிக்ஸி ஜார் எடுப்பது நல்லது அல்லது நீங்கள் வெட் கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். மாவை நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் சேர்த்து விட வேண்டாம். அதே போல கெட்டியாகவும் அரைத்து விடக்கூடாது.
பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு மாவு புளித்து நுரைத்து இருக்கும். இப்போது ஒரு கரண்டியை வைத்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல ஊற்றி வேக வையுங்கள். பொதுவாக இட்லி அவிக்க ஏழு நிமிடம் போதும்! ஆனால் இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் 15 நிமிடம் வரை நன்கு அவிக்க வேண்டும். அப்போது தான் மெத்தென்று அவிந்து வரும்.
இந்த சுவையான ராகி இட்லியுடன் தொட்டுக் கொள்ள காரசாரமான காரச் சட்னி அல்லது வெங்காய சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிடலாம். இதே மாதிரி தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து தோசை வார்த்தால் இன்னும் சூப்பராக மொறு மொறு என்று ராகி தோசை நமக்கு கிடைக்கும். ஆரோக்கியம் அள்ளித்தரும் இந்த ராகி இட்லி, தோசையை அடிக்கடி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இதில் ராகிக்கு பதிலாக வரகு சேர்த்தும் செய்யலாம்.
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]
- இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய […]