கோவை மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவுடன் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் புதுக் கூட்டணி தனித்து போட்டியிடுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏமாற்றம் அடைந்த சிபிஐ மற்றும் சிபிஎம் இடதுசாரி கட்சிகள் திமுகவுடனான கூட்டணியை வியாழக்கிழமை முறித்துக்கொண்டன. திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் ஆதரவுடன், இடதுசாரிகள் மக்கள் சேவை முன்னணி என கூட்டணி அமைத்து கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளில் இடதுசாரிகள் போட்டியிடுகிறார்கள். இதில், சிபிஐ 10 வார்டுகளிலும் சிபிஎம் 1 வார்டிலும் போட்டியிடுகின்றன. திமுக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவியை வழங்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் இடதுசாரிகள் தங்கள் கூட்டணி கட்சியான திமுகவுடன் மல்லுக்கட்டுகிறார்கள்.
கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இடதுசாரி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இந்த பேரூராட்சியில், தங்களுக்கு வலுவான வாக்கு வங்கி இருந்தும், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைக்கு திமுக தலைவர்கள் செவிசாய்க்கவில்லை. சீட் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனித்து போட்டியிடுகிறோம் என்று இடதுசாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில், மொத்தம் 16,861 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில், 1996 முதல் 2011 வரை மூன்று உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கண்ணம்பாளையம் பேரூராட்சியில் மட்டும் இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக இடதுசாரி கட்சி நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர். மேலும், இந்த பேரூராட்சியில் மட்டும் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது மாநில அளவிலான திமுக – சிபிஐ – சிபிஎம் கூட்டணியில் எந்த பிரச்னையையும் உருவாக்காது என்று நம்புகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மௌனசாமி ஊடகங்களிடம் கூறினார்.
கண்ணம்பாளையம் பேரூராட்சியில், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் சேவை முன்னணி என புது கூட்டணியை உருவாக்கி போட்டியிடுவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]