நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அண்ணாமார் திருமண மண்டபத்தில் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் அவர்களின் 267 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழா கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


குணாள நாடார் அவர்களுக்கு வெள்ளோடு பகுதியில் மணிமண்டபம் அமைத்து அவருடைய சிலையை நிறுவியும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்திய அரசை வலியுறுத்துதல். பனை வாரிய உறுப்பினர்களின் விபத்து இறப்பீட்டுத் தொகையை உயர்த்தி தர வேண்டும். நாடார் சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 15% இட ஒதுக்கீடு அரசு தர வேண்டும். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வருமானம் உள்ள பனை மர தொழிலாளர்களுக்கு, மீதமுள்ள ஆறு மாதத்திற்கு மீனவர்களுக்கு கொடுப்பதை போல் 6 மாத காலம் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். கோபிசெட்டிபாளையம் மேற்கு நுழைவாயில் பழுது பார்த்து, வர்ணம் பூசி காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். கள்ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். பனை மரத்தை தமிழக முழுவதும் விதைகள் மூலம் விதைத்து பனை மரங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். நாடார் சமுதாயப் பெண்களுக்கு சுய உதவி குழு மூலம் அதிக அளவில் கடன் உதவி தந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வழி செய்ய வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்த நாடார் சமுதாயம் இளம் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு பணியில் அதிக இட ஒதுக்கீடு தர வேண்டும். குன்னத்தூர், நம்பியூர், சிறுவலூர், வெள்ளோடு ஆகிய பகுதிகளில் பனை அருங்காட்சியகம் மற்றும் பனைத் தொழில் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். பதநீர் காய்ச்சும் பெண்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் தொழில் பயிற்சி அளித்து எளிய வகையில் அவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாடார் சமுதாய மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]