• Fri. May 10th, 2024

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

தேகம் மட்டுமே என்னுடன்

தேடும் உயிர் செல்லும்
என்றும் உனது நினைவின் பின்னுடன்

காணாது விழி நீரில்
கரைந்து போவதும்

கனவுகளுடன் ஞாபகங்களில்
மகிழ்ந்து போவதும்

வாடிக்கை என்றானது
இங்கு

நம் எண்ணங்களில் வாழ்ந்திடும் நேசம் உயிரோடு எந்நாளும்
மூச்சென்றானது

உன்னை எண்ணுவதே வாழ்வின்
மகிழ்வென்றானது
என் பேரழகனே
..!

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *