• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

ByA.Tamilselvan

Sep 27, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் அவரது பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி குற்றம் சாட்டியுள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தெரிவித்ததை அடுத்து மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பொற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை அக்டோபர் 30க்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஆணையிட்டுள்ளது.