• Fri. Apr 26th, 2024

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை கொட்ட போகுது

ByA.Tamilselvan

Apr 30, 2023

தமிழகம் மற்றும் புதுசேரியில் பெரும்பாலன இடங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மே.1-ல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மே.1-ம் ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மே.1-ம் தேதி விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *