• Fri. Apr 18th, 2025

பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் முடி காணிக்கை மண்டபம்

ByT.Vasanthkumar

Apr 14, 2025

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தினை மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆ.கலியபெருமாள் திறந்து வைத்தார்.

மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தினை, மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆ. கலியபெருமாள் திறந்து வைத்தார். இதில்
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர். அருண் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.