• Sat. Apr 20th, 2024

குன்றத்தூர் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்தது

ByA.Tamilselvan

Sep 21, 2022

காஞ்சிபுரம் அருகே நடந்துவரும் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1½ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது. மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.

Related Post

காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல்
ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *