• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆர்பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி..,

ByKalamegam Viswanathan

Jul 18, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர்4வது வார்டு திமுக நிர்வாகி G. முத்தையா மற்றும்இளநீர் நாகராஜ் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.

சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி ஒன்றிய துணைச் செயலாளர் தென்கரை ராமலிங்கம் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் மாணவரணி மாவட்ட செயலாளர் சிவா 7வது வார்டு செயலாளர் எஸ் பி மணி போது என்ற சுந்தர்ராஜன் சரத்குமார்
சங்கங்கோட்டை ஆறுமுகம் பிரேம் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.