• Fri. Apr 19th, 2024

திருவொற்றியூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவு..,
பாதிப்படையும் பொதுமக்கள்..!

Byவிஷா

Jul 17, 2022

திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எரிவாயு வாசனை அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. திருவொற்றியூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கழிவுகளே காற்றில் கலந்து அப்பகுதியில் பரவு வருவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் திருவொற்றியூர் ஜீவன் லால் நகர், காலடிப்பேட்டை, சின்ன மேட்டுப்பாளையம், ராஜா கடை மாட்டு மந்தை ஆகிய பகுதியில் எரிவாயு கசிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் இதனால் நுரையீரல் பிரச்சனை, சுவாச கோளாறு உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து திருவெற்றியூரை சுற்றியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏற்கனவே சிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட பொழுது கேஸ் அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கண்ட்ரோல் யூனிட்டுகளை பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எரிவாயு கசிவு குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது..,
திருவெற்றியூர் பகுதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் சற்று அதிகமாக வெளியேற்றப்படுவதால் இது போன்ற கேஸ் வாசனை பகுதி முழுவதும் பரவி வருகிறது. பெரும் விபத்துகள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக இதனை தடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் வரையறை இன்றி புற்றீசல் போல எரிவாயு உற்பத்தி தொழிற்சாலைகள் முளைத்த வண்ணம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சரியான, கால இடைவெளியில் இது போன்ற தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா என்பது மூடுமந்திரமாகவே உள்ளதாகவும் சாடியுள்ளனர்.
இது குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் ரங்கராஜன்..,
திருவொற்றியூரில் கேஸ் வாசனை பரவுவதாக கூறப்படும் பகுதிகளில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட என்.ஏ.பி.எல் என்ற ஆய்வகம் மூலமாக காற்றில் உள்ள மாசு துகள்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்த வாயு மாதிரிகள் மற்றும் மாசு துகள்கள் ஆய்வகத்தில் வைத்து சோதனை நடத்திய பிறகு, இரண்டு நாட்களுக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *