முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தார் என்றும் நாளை வீடுதிரும்புவார் என்றும் கவேரி மருத்துவமனை அறிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார்.காவேரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுவதும் குணமடைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், என மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.