• Wed. Apr 24th, 2024

அரசுப் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா: அச்சத்தில் பெற்றோர்கள்

By

Sep 15, 2021 ,

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது.

இதையடுத்து 231 மாணவர்கள் , 11ஆசிரியர்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்த 8 நபர்களுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக பள்ளிக்கு 15, 16 மற்றும் 17.09.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *