கனமழை எதிரொலி…பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு…
சிலிண்டர் வெடித்த வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள 4 வீடுகள்…
வீடு திட்டத்தின் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 103 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்கிகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த…
தென்காசியில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் நடைப்பெற்றது
தென்காசி மாவட்ட ஊராட்சிக் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் இரா சாக்ரடீஸ் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த கிராம ஒன்றிய சாலைகளை சீரமைத்துதரும்படியும், கீழப்பாவூர் ஒன்றிய தெற்குப் பகுதியில்…
ஆறுதல் கூறிய தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர்
சிலிண்டர் வெடிப்பில் உயிர் இழந்த பத்மநாபன் குடும்பத்திற்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் நேற்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் இறந்துவிட்டனர், 13 பேர்…
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வேண்டும்… அமைச்சர் அன்பில் மகேஷ்
“பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ‘அடல் டிங்கரிங் ஆய்வகம்’ தொடக்க விழா…
8 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறை நிரம்பிய சின்னசேலம் ஏரி
சின்னசேலம் ஏரி கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிலேயே 2வது முறையாக நிரம்பி வழிந்தோடுகிறது. சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 355 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சின்னசேலம் நகரப்பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக…
தலைக்கவசம் வாங்கினால் தக்காளி இலவசம்..!
சேலம் கோட்டை பகுதியில் தலைக்கவசம் வாங்கினால் தக்காளி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது இதன்…
தமிழக கோயில்களில் மாதம் ஒருமுறை உளவாரப்பணிகள் மேற்கொள்ளப்படும்…
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதம் ஒருமுறை உளவாரப் பணிகள் நடைபெறும் – கோவில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது குறித்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வழக்கில் முடிந்த பின்னர் தமிழக முதல்வரின்…
வைகை அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிப்பு .வினாடிக்கு 5119 கன அடி தண்ணீர் திறப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வினாடிக்கு 5119 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும்…








