• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 672

குறள் 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை பொருள் (மு.வ): காலந்தாழ்த்துச்‌ செய்யத்‌ தக்கவற்றைக்‌ காலந்தாழ்த்தே செய்யவேண்டும்‌; காலந்தாழ்க்காமல்‌ விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச்‌ செய்யக்‌ காலந்தாழ்த்தக்கூடாது.

குறள் 671

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது பொருள்(மு.வ): ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்‌. அவ்வாறு கொண்ட துணிவு காலந்‌ தாழ்த்து நிற்பது குற்றமாகும்‌.

குறள் 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு பொருள் (மு .வ): வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.

குறள் 669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை பொருள் (மு.வ): முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள் (மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள்(மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

குறள் 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின் பொருள்(மு.வ): எண்ணியவர்‌ (எண்ணியபடியே செயல்‌ ஆற்றுவதில்‌) உறுதியுடையவராக இருக்கப்‌ பெற்றால்‌, அவர்‌ எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்‌.

குறள் 665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும் பொருள் (மு.வ): செயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.

குறள் 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் பொருள்(மு.வ):"இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌' என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.

குறள் 663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும் பொருள்(மு.வ):செய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.