• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 684

குறள் 684

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு பொருள் (மு.வ): இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம்‌, ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம்‌ மூன்றின்‌ பொருத்தம்‌ உடையவன்‌ தூது உரைக்கும்‌ தொழிலுக்குச்‌ செல்லலாம்‌

குறள் 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு பொருள்(மு.வ): அரசனிடம்‌ சென்று தன்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான செயலைப்பற்றித்‌ தூது உரைப்பவன்‌ திறம்‌, நூலறிந்தவருள்‌ நூல்‌ வல்லவனாக விளங்குதல்‌ ஆகும்‌.

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று பொருள்(மு .வ): அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்‌.

குறள் 681

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): அன்புடையவனாதல்‌, தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல்‌, அரசர்‌ விரும்பும்‌ சிறந்த பண்பு உடையவனாதல்‌ அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்‌.

குறள் 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து பொருள் (மு.வ): வலிமை குறைந்தவர்‌, தம்மைச்‌ சார்ந்துள்ளவர்‌ நடுங்குவதற்காகத்‌ தாம்‌ அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்‌ வலிமை மிக்கவரைப்‌ பணிந்து ஏற்றுக்‌ கொள்வார்‌.

குறள் 677

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல் பொருள் (மு.வ): செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.

குறள் 675

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல் பொருள்‌ (மு.வ): வேண்டிய பொருள்‌, ஏற்ற கருவி, தக்க காலம்‌, மேற்கொண்ட தொழில்‌, உரிய இடம்‌ ஆகிய ஐந்தினையும்‌ மயக்கம்‌ தீர எண்ணிச்‌ செய்ய வேண்டும்‌.

குறள் 677

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல் பொருள்(மு.வ): செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.

குறள் 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும் பொருள் (மு.வ): செய்யத்‌ தொடங்கிய செயல்‌, கொண்ட பகை என்று இவ்விரண்டின்‌ குறை, ஆராய்ந்து பார்த்தால்‌, தீயின்‌ குறைபோல்‌ தெரியாமல்‌ வளர்ந்து கெடுக்கும்‌.

குறள் 673

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல் பொருள் (மு .வ): இயலுமிடத்திலெல்லாம்‌ செயலைச்‌ செய்து முடித்தல்‌ நல்லது; இயலவில்லையானால்‌ பயன்படும்‌ இடம்‌ நோக்கியாவது செய்யவேண்டும்‌.