• Fri. Mar 29th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 554

குறள் 554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு. பொருள் (மு.வ): (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

குறள் 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் பட பொருள் (மு.வ): ( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத்‌ தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால்‌ பலர்‌ துன்பப்பட்டுத்‌ துன்பம்‌ பொறுக்க முடியாமல்‌ அழுத கண்ணீர்‌ அன்றோ?

குறள் 553

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும் பொருள் (மு.வ): நாள்தோறும தன்‌ ஆட்சியில்‌ விளையும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்‌, நாள்தோறும்‌ ( மெல்ல மெல்லத்‌ ) தன்‌ நாட்டை இழந்து வருவான்‌.

குறள் 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு பொருள்(மு.வ): ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன்‌ குடிகளைப்‌ பொருள்‌ கேட்டல்‌, போகும்‌ வழியில்‌ தனியே வேல்‌ ஏந்தி நின்ற கள்வன்‌ ‘கொடு’ என்று கேட்பதைப்‌ போன்றது.

குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.பொருள் (மு.வ):குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

குறள் 550:

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். பொருள் (மு.வ): கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

குறள் 549:

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.பொருள் (மு.வ): குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வ உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 546:

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.