• Sun. Jun 11th, 2023

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 309:

குறள் 309:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின் பொருள் (மு.வ): ஒருவன்‌ தன்‌ மனத்தால்‌ சினத்தை எண்ணாதிருப்பானானால்‌, நினைத்த நன்மைகளை எல்லாம்‌ அவன்‌ ஒருங்கே பெறுவான்‌.

குறள் 308:

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. பொருள் (மு.வ): பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

குறள் 307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று விளக்கம்: சினத்தைப்‌ பொருளென்று கொண்டவன்‌ அழிதல்‌, நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல்‌ ஆகும்‌.

குறள் 306:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும். பொருள் (மு.வ): சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். பொருள் (மு.வ): ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

குறள் 304:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற. பொருள் (மு.வ): முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். பொருள் (மு.வ): யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

குறள் 302:

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. பொருள் (மு.வ): பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

குறள் 301:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா லென் பொருள் (மு.வ): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

குறள் 300:

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. பொருள் (மு.வ): யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.