• Sat. Apr 27th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 551

குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.பொருள் (மு.வ):குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

குறள் 550:

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். பொருள் (மு.வ): கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

குறள் 549:

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.பொருள் (மு.வ): குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வ உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 546:

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.பொருள் (மு.வ): நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

குறள் 544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு பொருள் (மு.வ): குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.

குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல் பொருள் (மு.வ): அந்தணர்‌ போற்றும்‌ மறைநூலுக்கும்‌ அறத்திற்கும்‌ அடிப்படையாய்‌ நின்று உலகத்தைக்‌ காப்பது அரசனுடைய செங்கோலாகும்‌.

குறள் 542

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி பொருள் (மு.வ): உலகத்தில்‌ உள்ள உயிர்கள்‌ எல்லாம்‌ மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல்‌ குடிகள்‌ எல்லாம்‌ அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்‌.