அம்மணமாக சுற்றித் திரிந்தாள்
தாய்வழி சமூகத்தில்
வலியின்றி சுதந்திரமாய்.
திகிலின்றி பயணிப்பாள்
இருளும் மிரளும்
அவளின் பாதசுவடுகளுக்கு.
வனாந்திரமெங்கும் _ அவளுக்கான வழிகள் சாரை,சாரையாய் _ மனித
சிராய்ப்பின்றி
வாழ்விடம் சேர்வாள்.
தந்தைவழி சமூகத்தில்
மந்தைக் கூட்டங்கள்
சந்தையில் விற்கின்றனர்
பெண்ணைப் பொருளெனெ,
அவர்களின் சவரக்கத்திக்கும்,
உள்ளாடைக்கும் ,
விளம்பர பதுமையாக்குகின்றனர்
அவளை.
குழந்தைகளும்,
குழவிகளும்.
முகமூடியணிந்தும்
உச்சிப்பொழுதில்
நடமாட முடியவில்லை
பதட்டமின்றி
நாகரீக உலகில்.
க. பாண்டிச்செல்வி