சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா உலக அளவில் கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.
பாலைவன வாழ்க்கைக்கு உதவும் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி, மாபெரும் திருவிழாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இதில் ஒட்டகப் பந்தயம், விற்பனை மற்றும் பிற விழாக்களும் அடங்கும்.
வெற்றி பெற்ற ஒட்டகங்களின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் கிடைக்கும். இந்த போட்டிகளில் வெல்லும் ஒட்டகங்களின் உரிமையாளர்கள் அதிக விலைக்கு விலங்குகளை விற்கலாம்.
இந்த திருவிழா பெடோயின் பாரம்பரியத்தை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒட்டக வளர்ப்பு இங்கு மிகவும் பிரபலமானது.
போட்டியின் விதிகளின்படி, போடோக்ஸ் ஊசி, முகத்தை உயர்த்துதல் மற்றும் பிற அழகுசாதன மாற்றங்கள் அனுமதிக்கப்படாது. இருப்பினும், பல வளர்ப்பாளர்கள் தங்கள் ஒட்டகங்களை வெற்றிபெற வைக்க சிலிகான் மற்றும் ஃபில்லர்களை உட்செலுத்துவது போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு மாத காலம் தொடரும் இந்த விழாவில், செயற்கையாக மேம்படுத்தப்பட்ட ஒட்டகங்களின் மீதான தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், “சிறப்பு மற்றும் மேம்பட்ட” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டகங்களை சேதப்படுத்துவதைக் கண்டறிவதாக அல்ஜசீரா அதிகாரப்பூர்வ சவுதி செய்தி நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது
இந்த ஆண்டு, ஒட்டகத் திருவிழா தொடர்பாக சுமார் 147 முறைகேடு வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டகங்கள் சேதமடைவதைக் கண்டறிய உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தில், ஒட்டகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.