ஆம்னி பஸ்களில் புதிய கட்டணம் அறிவிப்பு..
ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக தலையிட்டு ஆம்னி பஸ் உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டிகை காலங்களில் கட்டணத்தை திடீரென…
அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்
அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக்…
திருப்பதியில் இன்று கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில்…
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு…
மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த…
சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்
சீன செல்போன் நிறுவனத்தின் டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் ‘ரெட்மி’ என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான…
இன்று 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு…
அக்டோபர் இறுதியில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்- அமைச்சர் தகவல்
பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியதாவது:- பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 10,351 பேர் பணம் கட்டி கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 2-வது சுற்று நடந்து…
தமிழக மீனவர்கள் எத்தனை நாட்கள் துயரம் அனுவிப்பர்? உச்சநீதிமன்றம கேள்வி
இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரத்தை அனுவிப்பா் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மீனவர்களின் துயரம் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என…
2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாரமுல்லா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு…