தமிழகத்தில் மூக்கையும் , வாயையும் நுழைப்பேன் என பேசிய தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிராகபூர்வ நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தெலுங்கானாவில் தமிழிசையால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்கிறார். மேலும் இது போன்ற நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என தமிழக ஆளுநருக்கும் அவர் எச்சரிக்கை விடுப்பதுபோல தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளது.