சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி தலைமையிசிரியர்ராக வெங்கடேசன் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. இவர் பல பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் என முதல்வர் தனி பிரிவுக்கு புகார் சென்று உள்ளது. அதன் அடிப்படிடையில் தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூன்று மணி நேரமாக சோதனை நடந்து வருகிறது.