மதுரை மாவட்டத்தில்,கல்விக்கடன் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது.
அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரானா காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி சார்ந்த பிரச்சனைகளும், மாணவர்கள் இன்னல்களும் அதிகம்.கொரானா காலகட்டத்தில் கல்விக்கடன் வழங்குவது 54 சதவீதமாக குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மிக முக்கிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியுள்ளோம். இது தேசிய அளவில் மிக முக்கிய சாதனை ஆகும்.
மதுரை மாவட்டத்தில் 357 பள்ளிகளில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
இதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் 3முறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. எத்தனை பேருக்கு ககல்விக்கடன் கொடுப்பது என்பது முக்கியமல்ல, எத்தனை பேருக்கு கல்விக்கடன் மறுக்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு செயல்பட்டோம். யாருக்கும் கல்விக்கடன் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து மேளா நடத்தினோம்.
மதுரை வங்கி கடன் வழங்கும் முகாமில் 11.81கோடி ரூபாய் வழங்கினோம்.
டிசம்பர் 31ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 1095 மாணவர்களுக்கு 99.21கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதில், கனரா வங்கி அதிகமாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கல்விக்கடனுக்காக தனிப்பிரிவு உருவாக்கி செயல்பட்டோம். இதில் மேலும், 319 விண்ணப்ங்கள் நிலுவையில் உள்ளன.
கல்விக்கடன் வழங்க இந்தாண்டு 150 கோடி என்ற இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த 100 விண்ணப்ங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 40-50கோடி மட்டுமே கடனாக கொடுத்தாம். மாணவர்கள் கல்விக்கடனுக்கு வித்யாலெட்சுமி இணையம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் அந்த இணையம் யார் கையில் உள்ளது என தெரியவில்லை.
வித்யா லெட்சுமி இணையத்திற்கு மாவட்ட அதிகாரிகளுக்கு கடவுச்சொல் தரப்பட வேண்டும். வங்கிகள் கல்விக்கடன் கொடுத்ததும் வட்டியை வரவு வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இதை என் பணியாகவே கருதுகிறேன்.
5000 பேரை இலக்கு வைத்து கடன் கொடுக்க நினைத்தோம். 1000பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட 100 விண்ணப்பங்களை மறுபரீசிலனை செய்வோம்.
கல்விக்கடன் கொடுத்தால் திரும்ப வராது என்ற மனநிலையில் தான் வங்கி அதிகாரிகள் உள்ளனர். வங்கிகளின் இத்தகைய போக்கை மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் கேட்க வேண்டும்.
மதுரையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற மாவட்டங்களில் கல்விக்கடன் வழங்குவதை செயல்படுத்த வேண்டும்.
கல்விக்கடன் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு வங்கிகள் இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால விஷயத்தில் ஒன்றிய அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும், என்றார.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]