திருப்பூர் பின்னலாடை தொழில் சரிவடைந்ததற்கு மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தான் காரணம் என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு வடக்கு மாவட்டம்,நம்பியூர் ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நம்பியூர் ஒன்றிய திமுக அவைத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு வந்த அனைவரையும் ஒன்றிய கழக செயலாளரும் நம்பியூர் பேருராட்சி தலைவருமான மெடிக்கல் பா.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் நியமிப்பதற்கு ஆலோசனை வழங்கியும், தற்போது திருப்பூர் பின்னல் ஆடை தொழில் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆளூம் பிஜேபி அரசு எடுத்த கொள்கை முடிவு தான் காரணம். அதில் நூல் விலை ஏற்றம் மூலப்பொருட்களின் விலை உயர்வு அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னலாடை தொழில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது எனவும்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதற்கு நன்றி தெரிவித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்பியூர் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜீவா ஒ.சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சென்னிமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா முரளி, சரஸ்வதி பழனிச்சாமி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளைகழக நிர்வாகிகள், துணை அமைப்புகள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள், இளைஞர், மகளிரணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நம்பி ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]