சத்தியமங்கலம் அருகே யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்ததால் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.
சத்தியமங்கலத்தை அடுத்த ராம பையனூரை சேர்ந்தவர் அம்மாசை குட்டி (வயது 62). இவருடைய மனைவி தேவிமணி (55). இவர்கள் ராமபையலூர் பகுதியிலேயே தோட்டம் அமைத்து அங்கேயே குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.இவர்களுடைய 2 ஏக்கர் நிலத்தில் வாழை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். அதற்கு காவலாக வீட்டின் முன் பகுதியிலேயே அம்மாசைகுட்டி தூங்குவது வழக்கம்.அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டின் முன்தினம் அம்மாசைகுட்டி படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் நாய் குரைத்து உள்ளது. சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டிருந்த அம்மாசைகுட்டி விழித்து எழுந்து டார்ச் லைட்டை எடுத்து அடித்து பார்த்தார்.அப்போது தோட்டத்துக்குள் யானை நின்று கொண்டிருந்ததை கண்டு திடுக் கிட்டார். மேலும் அந்த யானையானது அவரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் அங்கிருந்து ஓட முயன்றார். இதில் அவர் கால் இடறி கீழே விழுந்தார்.

இதனிடையே அருகே வந்த யானையானது, அம்மாசைகுட்டியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]