• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பிப்.1 முதல் ஐஎம்பிஎஸ் சேவையில் புதிய மாற்றம்

Byவிஷா

Jan 31, 2024

24 மணி நேரமும் கிடைக்கக் கூடிய நிகழ் நேர கட்டணச் சேவையானது (IMPS) நாளை பிப்ரவரி 1 முதல் புதிய மாற்றம் செய்ய இருப்பதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் RBI-அங்கீகரிக்கப்பட்ட ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வழங்குநர்கள் (PPI) மூலம் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சேவையை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வழங்குகிறது.
IMPS இன் கீழ், இரண்டு வகைகள் உள்ளன:

  1. பெறுநரின் வங்கிக் கணக்கு எண், வங்கிப் பெயர் மற்றும் IFSC குறியீடு.
  2. பெறுநரின் மொபைல் எண் மற்றும் மொபைல் பண அடையாளங்காட்டி (MMID) ஆகியவற்றைப் பயன்படுத்தும் நபருக்கு நபர் பணம் செலுத்துதல். MMID என்பது மொபைல் வங்கி அணுகலுக்காக வங்கிகளால் வழங்கப்படும் தனித்துவமான ஏழு இலக்க எண்ணாகும்.இரண்டாவது முறைக்கு குறைவான விவரங்கள் தேவைப்பட்டாலும், அனுப்புபவர் மற்றும் பெறுபவருக்கு இதற்கு MMID-கள் தேவை. எனவே, பெறுநரின் எம்எம்ஐடியை அறிந்து கொள்ள வேண்டியதன் காரணமாக இந்த அணுகுமுறை குறைவான பிரபலமாக உள்ளது.
    இந்த விதிமுறையை தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் திருத்தியுள்ளது.இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, இனி பயனாளர்கள் ஐ.எம்.பி.எஸ் முறையில் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பினால், பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கு, IFSC Code உள்ளிட்ட விவரங்கள் தேவையில்லை.மாறாக, பணம் பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை வைத்து 5 லட்சம் ரூபாய் வரை எளிதாக பணம் அனுப்பிவிடலாம்.
    இந்நிலையில் நாளை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறை மூலமாக ஒருவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பும்போது பயனாளியின் பெயரை கட்டாயமாக அதில் சேர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.