ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது…
இது தொடர்பாக டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ ஒரு ஆய்வு நடத்தியது…-இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 331 மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஆயிரம் குடும்பத்தினர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். இவர்களில் 66 சதவீதத்தின் ஆண்கள், 34 சதவீதத்தினர் பெண்கள்…-இந்த ஆய்வின் முடிவுகளை லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு…-கடந்த 3 ஆண்டுகளில் 39 சதவீதத்தினர் ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களில் 24 சதவீதத்தினருக்கு இழந்த பணம் திரும்பக் கிடைத்துள்ளது…-ஆனால் புகார் செய்தவர்களில் 70 சதவீதத்தினர் தங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்-ஆய்வில் பங்கேற்று பதில் அளித்தவர்களில் 23 சதவீதத்தினர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மோசடி அனுபவம் தங்களுக்கு வாய்த்ததாக தெரிவித்துள்ளனர்-ஆன்லைனில் விளம்பரங்களைப் பார்த்து, குறிப்பிட்ட இணையதளத்தில் பணத்தைச் செலுத்தி விட்டு, பொருள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தும், பொருட்கள் வினியோகம் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டதாக 13 சதவீதத்தினர் வேதனை தெரிவித்து உள்ளனர்…-10 சதவீதத்தினர் ஏ.டிஎம்.கார்டு மோசடிக்கு ஆளாகி உள்ளனர்-10 சதவீதத்தினர் வங்கிக்கணக்கு மோசடி, 16 சதவீதத்தினர் பிறவகையான மோசடி பற்றி தெரிவித்துள்ளனர்…-ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 சதவீதத்தினரில் குடும்பத்தில் ஒருவர் ஆன்லைன் பண மோசடி பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்…-9 சதவீதத்தினர் தங்கள் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்…-57 சதவீதத்தினர் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் இந்த ஆன்லைன் பண மோசடியில் தப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்…-ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டவர்களில் 18 சதவீதத்தினர் முறைப்படி உரிய இடத்தில்- நிறுவனத்தில் புகார் செய்துள்ளனர். அவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்துள்ளது…-6 சதவீதத்தினர் அதிகாரிகளிடம் புகார் செய்து, பணம் திரும்பக்கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். 41 சதவீதத்தினரின் புகார் மீது இன்னும் தீர்வு கிடைக்காமல் பிரச்சினை நிலுவையில் உள்ளது…-12 சதவீதத்தினர் புகார் கொடுக்க வேண்டாம் என தாங்கள் முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளனர் – இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது…
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]