திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா
திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்…
கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம்.
கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் முன்பு வேலை நிறுத்த போராட்டம்…
குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வரும் நிலையில், இன்று குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில்…
செந்தில்பாலாஜி ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு…
தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ…
மார்ச் 5ல் முதலவாது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள்
நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களையும், மாநிலங்களையும் கௌரவிக்கும் வகையில், மார்ச் 5ஆம் தேதியன்று முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர்…
வரதராஜபுரத்தில் காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் மார்ச்-1 ல் துவங்கப்படுகிறது.
ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி, கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இது குறித்து பிரிமியர் மில்ஸ் குழும…
சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம்.., தமிழக அரசு அதிரடி உத்தரவு…
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை…
காளையார்கோவில், மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான தொகுப்பை வழங்கினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே ஆர். பெரியகருப்பன் மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் தென்னவன் வழிகாட்டுதலோடு காளையார் கோவில் தெற்கு…
2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி
ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி. மருத்துவம் மற்றும்…