தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சகத்தில் இன்று பெரிய மாற்றம் நடந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், சுதந்திரத்திற்கு பிறகு, நடைபெற்ற முதல் பொது தேர்தல் முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் பட்டியலை கீழே காண்போம்.
சி.சுப்பிரமணியம்:
ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோரின் அமைச்சரவைகளில், 1952 முதல் 1962 வரையில், நிதித்துறை மட்டும் இன்றி சட்டம், கல்வி ஆகிய துறைகளை கவனித்து வந்தவர் சி.சுப்பிரமணியம்.
பக்தவசலம்:
மெட்ராஸ் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சரான பக்தவசலம், முதலமைச்சராக பதவி வகிப்பதற்கு முன்பு, 1962 முதல் 1963ஆம் ஆண்டு வரை காமராஜர் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார்.
அண்ணா:
நவீன தமிழ்நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றிய அண்ணா, 1967 முதல் 1969 வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.
செ.மாதவன்:
முதலமச்சராகவும் நிதித்துறையையும் கவனித்து வந்த அண்ணாவின் மறைவுக்கு பிறகு, நிதித்துறையை செ.மாதவன் சில காலம் கவனித்து வந்தார்.
கே.ஏ.மதியழகன்:
திமுக தொடங்கப்பட்ட காலத்தில், அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ.மதியழகன், 1969 முதல் 1970 வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.
நெடுஞ்செழியன்:
அண்ணாவின் மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நெடுஞ்செழியன், எம்ஜிஆர் புது கட்சி தொடங்கி ஆட்சி அமைத்தபோது, 1980 முதல் 1987 வரை, அவரின் அமைச்சரவையிலும் 1991 முதல் 1996 ஜெயலலிதா அமைச்சரவையிலும் நிதியமைச்சராக பதவி வகித்தார்.
நாஞ்சில் மனோகரன்:
திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது, அதிலிருந்து பல்வேறு தலைவர்கள் விலகினர். அதில், முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன். 1977 முதல் 1980 வரையிலான காலத்தில், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார்.
மு.கருணாநிதி:
1971 முதல் 1976 வரையிலும் நிதி அமைச்சராகவும், 1989 முதல் 1991 வரையில் முதலமைச்சராக மட்டுமின்றி நிதி அமைச்சராகவும் கருணாநிதி பதவி வகித்தார். 1996 முதல் 2001ம் ஆண்டு காலகட்டத்திலும், இவரே நிதியமைச்சர் பதவியை வகித்து வந்தார்.
சி.பொன்னையன்:
இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெயலலிதாவின் அமைச்சரவையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பொன்னையன், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.
க.அன்பழகன்:
2006 முதல் 2011 வரை, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான க.அன்பழகன், நிதித்துறையை கவனித்து வந்தார்.
ஓ.பன்னீர் செல்வம்:
2011 முதல் 2017 வரை, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், நிதித்துறையை கவனித்து வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். 2018 முதல் 2021 வரையில், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.
டி.ஜெயக்குமார்:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் 16 பிப்ரவரி 2017 – 21 ஆகஸ்ட் 2017 வரை நிதியமைச்சராக ஜெயக்குமார் செயல்பட்டார்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:
கிட்டத்தட்ட 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு பிறகு, அமைந்த திமுக அரசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை நிதியமைச்சராக பதவி வகித்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
தங்கம் தென்னரசு:
2006 முதல் 2011 வரையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் 2021 முதல் இன்று வரை, தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்த தங்கம் தென்னரசுக்கு தற்போது நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]