சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி நகரின் பல பகுதிகளில் சாலைகள் பராமரிப்பு, கழிவுநீர் வாறுகால்கள் வசதிகள் இல்லாமல் கடுமையான சுகாதாரக்கேடு இருந்து வந்தது. தற்போது நகரின் பல இடங்களிலும் கழிவுநீர் வாறுகால்கள் கட்டும் பணி, வாறுகால்கள் இணைப்பு பகுதிகளில் சிறிய அளவிலான பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பணிகள் சரியாகவும், ஒழுங்காகவும் நடைபெறுகின்றதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறுவதால், வாறுகால்கள் கட்டும் பணிகள் சரியாக நடைபெறவில்லை. மாநகராட்சி உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் உள்ள, சேர்மன் பி.கே.எஸ்.சண்முக நாடார் சாலையில் கழிவுநீர் வாறுகால்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல், மின்கம்பங்கள் குறுக்கே உள்ள நிலையில் வாறுகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கழிவுநீர் செல்வதற்கு தடை ஏற்பட்டு, கழிவுநீர் சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின் போதே இது குறித்து கூறியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காத நிலையில், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து முடியும் நிலையில் உள்ளது. செய்யும் பணியை சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்தப் பகுததியில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் அதிகம் இருப்பதால், கழிவுநீர் வாறுகால்களை சரியாாகவும் முறையாகவும் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]