• Fri. Apr 19th, 2024

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் திருமணங்கள்…

Byமதி

Dec 18, 2021

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர், காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவித்து விடுகிறார்கள். அந்த வகையில் மிக பிரமாண்டமாக திருமண உறவில் இணைந்து பின் விவாகரத்து பெற்ற பிரபலங்களின் பட்டியல் இதோ…

உலக நாயகன் கமலஹாசன் பாரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியை 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே,1988 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்தார்.பின்னர் விவாகரத்து பெற்ற அதே ஆண்டு, நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

1986 ஆம் ஆண்டு காதலித்து இயக்குனர் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்ட நடிகை ரேவதி, 2013 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

முந்தானை முடிச்சி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஊர்வசி, 2000 ஆம் ஆண்டு, பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள், 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நடிகை சரிதா பிரபல மலையாள நடிகர் முகேஷ் என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

1987 ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகர் ராமராஜன் – நளினி ஜோடி… 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பிரிந்தனர்.

பார்த்திபனும், சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2001 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்து தனித்தனியே சென்றுவிட்டனர்.

ஒரு சில படங்களில் நடித்து, ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை லிசி, இயக்குனர் பிரியாதர்ஷனை காதலித்து, 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

‘காதல் கொண்டேன்’ படத்தில் நடிக்கும் போது, அந்த படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வாலுக்கு, இயக்குனர் செல்வராகவனுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின் இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக கடந்த 2006 ஆண்டு நடந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சுஜன்யா சந்திரன் என்கிற பெண்ணை, கடந்த 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ரகுவரன், ரோஹிணி திருமணமும் 2004ல் விவகாரத்தில் முடிந்தது. அதேபோல், அரவிந்த்சாமி தனது மனைவியை 2010ல் விவகாரத்து செய்தார்.

பிரபல நடிகை பானுப்ரியாவின் சகோதரரை, கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை வித்தியா, 2012 ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரஷாந்த் நான்கு வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரபு தேவா, ஒரு சில பிரச்சனைகள் காரணமாக 2011 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

2014 ஆம் ஆண்டு, உருகி உருகி காதலித்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த பட்டியலில் தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் இணைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு திருமணமான இந்த ஜோடி இந்த ஆண்டு விவகாரத்தைப் பெற்றது.

இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம் இதுதான் அதுதான் என பலர் கூறினாலும், ஒரே ஒரு காரணம் தான். அது அவர்களது வாழ்க்கை.. அவர்களது முடிவு மற்றும் விருப்பம் என்பது மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *