• Thu. Apr 25th, 2024

ஜல்லிக்கட்டு மத்திய அரசின் அரசாணைப்படி நடக்கும்-ஓபிஎஸ்

Byகாயத்ரி

Dec 18, 2021

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். பேட்டியளித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அதில், ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து கேட்கப்பட்டதற்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்.

மேலும் பேசிய அவர், ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அது குறித்து நான் எந்தவித கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். மேலும் நேற்று திருநெல்வேலியில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதோடு. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்திட வேண்டும்.

அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது பாலியல் குற்றச்சாட்டு அதிகரிப்பது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *