தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் ஆளும் கட்சியான தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், குறிப்பாக தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பணம் இருந்தா ‘சீட்’ என அ.தி.மு.க., வினருக்கு கட்சி மேலிடம் கட்டளையிட்டுள்ளதால், மூத்த நிர்வாகிகள் பலர் ‘ஜஹா’ வாங்கிய பரிதாபம் இங்குதான் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு எல்லாம் தேவையில்லை. பணம் இருந்தால் போதும், என்ற அடிப்படையில் கணவன், மனைவிக்கு தாராள மனதுடன் ‘சீட்’ வழங்கியும் உள்ளனர். சிலருக்கு வேண்டா, விருப்பமாகவும் வழங்கியதை பார்த்த, மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்கள், இன்னும் உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டுமா? அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டாமா? என மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கட்சி தொண்டர்களின் புலம்பல் ‘ரீங்காரமாக’ ஒலித்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பலரும் கட்சித் தாவலில் ஈடுபடப் போவதாக ‘ரூமர்’ கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் தேனி மாவட்டம் ‘ அசைக்க முடியாத’ அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. இதனால் பலரும் இங்கு போட்டி போட விருப்பம் தெரிவிப்பர். வெற்றி பெற்ற பலரும் அமைச்சர்களாக வலம் வந்ததை, காணமுடிந்தது. இப்படிப்பட்ட ‘வலிமை’ வாய்ந்த கட்சியின் நிலைமை காலப்போக்கில் தலைகீழாக மாறிப்போனது. கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பாலான இடங்களை ஆளும் கட்சியான தி.மு.க., கைப்பற்றியது. நகராட்சிகளுக்கு 177 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் […]
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]