தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் ஆளும் கட்சியான தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், குறிப்பாக தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பணம் இருந்தா ‘சீட்’ என அ.தி.மு.க., வினருக்கு கட்சி மேலிடம் கட்டளையிட்டுள்ளதால், மூத்த நிர்வாகிகள் பலர் ‘ஜஹா’ வாங்கிய பரிதாபம் இங்குதான் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு எல்லாம் தேவையில்லை. பணம் இருந்தால் போதும், என்ற அடிப்படையில் கணவன், மனைவிக்கு தாராள மனதுடன் ‘சீட்’ வழங்கியும் உள்ளனர். சிலருக்கு வேண்டா, விருப்பமாகவும் வழங்கியதை பார்த்த, மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்கள், இன்னும் உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டுமா? அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டாமா? என மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கட்சி தொண்டர்களின் புலம்பல் ‘ரீங்காரமாக’ ஒலித்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பலரும் கட்சித் தாவலில் ஈடுபடப் போவதாக ‘ரூமர்’ கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் தேனி மாவட்டம் ‘ அசைக்க முடியாத’ அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. இதனால் பலரும் இங்கு போட்டி போட விருப்பம் தெரிவிப்பர். வெற்றி பெற்ற பலரும் அமைச்சர்களாக வலம் வந்ததை, காணமுடிந்தது. இப்படிப்பட்ட ‘வலிமை’ வாய்ந்த கட்சியின் நிலைமை காலப்போக்கில் தலைகீழாக மாறிப்போனது. கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பாலான இடங்களை ஆளும் கட்சியான தி.மு.க., கைப்பற்றியது. நகராட்சிகளுக்கு 177 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]