விஜய் டிவியின் சீரியல்களில் அதிக ரசிகர்களை பெற்ற சீரியல், பாக்கியலஷ்மி.. தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பிற்குள்ளாக்கும் வகையில் பல திருப்பங்கள் வரும் வாரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!
விஜய் டிவியின் பிரைம் ஸ்லாட்டில் வெளியாகி வருகிறது பாக்கியலஷ்மி தொடர். இந்தத் தொடரில் முன்னாள் காதலியுடனான நெருக்கம், 2வது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை மற்றும் அதற்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவு என்று லீட் கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த மூவ்கள் சீரியலை மிகவும் பரபரப்பாக்கி வருகிறது.
தன்னுடைய காதலியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கோபி, தனது மனைவி பாக்கியலஷ்மியை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார். என்ன விவரம் என்று தெரியாமல் கணவன்மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த விவாகரத்து பேப்பரில் பாக்கியலஷ்மியும் கையெழுத்து போடுகிறார். விஷயம் தெரியாமல் அவர் செய்யும் இந்த செயல் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தனது காதலியை திருமணம் செய்யவிருக்கிறார் கோபி. அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக கதை நகரவுள்ளதாகவும், வரும் வாரத்தில் சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்டுகளை இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் கோபியின் அப்பா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவராலும் உண்மை வெளிப்படுத்த முடியாத நிலையில், பாக்கியாவிற்கு உண்மை தெரியவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கோபியின் திருமணம் நடைபெறுமா, நடைபெற்றால் பாக்கியலஷ்மியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் தொடர் நகரவுள்ளது
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]