- பவானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார்.
- போதை பொருள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது
- சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 ரூபாயாக உயர்ந்தது. மத்திய பிரதேசத்தில் 110.88 ரூபாயாக உயர்ந்ததுள்ளது.
- கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தடுக்க தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி அறிவிப்பு
- கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை.
6.சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற, தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
- வீரபாண்டி ராஜாவின் உடல் இன்று சேலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம்
- நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்.
- திரைப்பட தொழிலாளர்களுக்காக முன்னனி நடிகர்கள் வருடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்